மெயில் சர்வர் வகைகள்


உங்கள் மெயில் கணக்கினைக் கம்ப்யூட்டரில் பதிவு செய்திடுகையில், உங்களுக்கு எந்த வகையான அக்கவுண்ட் வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டு, அவற்றின் வகைகளாக - POP, SMTP மற்றும் IMAP என்பவை காட்டப்படும். இவை எவற்றைக் குறிக்கின்றன? இடையே உள்ள வேறுபாடு என்ன எனப் பார்க்கலாம்.

1.  பாப் .3 (POP3 ):


இதனை Post Office Protocol 3 என விரிக்கலாம். இந்த வகையில் செயல்படும் சர்வரில், உங்களுக்கென வரும் மின் அஞ்சல் செய்திகள் பாதுகாத்து வைக்கப்படும்.

நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில், ஏதேனும் ஒரு (Windows Mail, Outlook அல்லது Thunderbird) இமெயில் கிளையண்ட் புரோகிராமினைப் பயன்படுத்தி, இவற்றை உங்கள் கம்ப்யூட்டருக்குள் பதிக்கலாம். பொதுவாக, அவ்வாறு பதித்தவுடன், அந்த மெயில் செய்திகள் சர்வரிலிருந்து அழிக்கப்படும்.

அப்போதுதான் அடுத்து வரும் செய்திகளுக்கு இடம் கிடைக்கும். நீங்கள், எந்தக் கம்ப்யூட்டரில் இந்த மெயில் செய்திகளைப் பதிந்தீர்களோ, அவற்றை உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, திறந்து பார்த்து படித்து பதில் அனுப்பலாம். அல்லது நீக்கலாம்.

2. ஐமேப் (IMAP):

Internet Message Access Protocol என இதனை விரித்துக் கூறலாம். இந்த வகை மெயில்களைக் கொண்டிருக்கும் சர்வர் கம்ப்யூட்டரில் உள்ள மெயில்களை, இணைய இணைப்பில் அந்த சர்வரைத் தொடர்பு கொண்டு, படிக்கலாம், பதில் அளிக்கலாம் மற்றும் நீக்கலாம்.

நீங்கள் நீக்கும் வரை, அந்த சர்வரில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் தாங்கும் வரை, இந்த மெயில்கள் அங்கேயே தங்கும். அந்த சர்வரிலேயே அவை இருப்பதால், இணைய இணைப்பு உள்ள எந்தக் கம்ப்யூட்டர் வழியாகவும், இந்த சர்வரைத் தொடர்பு கொண்டு, இவற்றை எந்த நேரத்திலும் படிக்கலாம். நீக்கவும் செய்திடலாம். இப்போது, பெரும்பாலான மக்கள் இந்த வகை மெயில் சேவையினையே விரும்புகின்றனர்.

3. எஸ்.டி.எம்.பி.:

Simple Mail Transfer Protocol என இதனை அழைக்கின்றனர். இந்த சர்வரிலிருந்து, நீங்கள், அனுப்பும் மெயில்களையே கையாள முடியும். இதனை POP3 அல்லது IMAP சர்வருடன் இதனைப் பயன்படுத்தலாம்.

எனவே, நீங்கள் மெயில் அனுப்ப முயற்சிக்கையில், STMP உடன் தொடர்பு படுத்தி, பிழைச் செய்தி வந்தால், அது வெளியே செல்லும் மெயில் குறித்ததாகத்தான் இருக்கும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?