Posts

Showing posts from October, 2014

சாம்சங் ஸ்மார்ட் போன்களுக்கு இலவச ஹியர் மேப்ஸ்

Image
சென்ற ஆகஸ்ட் மாதம், ஹியர் (HERE) நிறுவனம் சாம்சங் நிறுவனத்துடன் தான் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் குறித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.  அதன் அடிப்படையில், சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன்கள், இணைய இணைப்பு இல்லாமலேயே பயன்படுத்தக் கூடிய வகையிலான ஹியர் மேப்ஸ் அப்ளிகேஷன் ஒன்றின் சோதனை பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது.  எந்த ஒரு இடத்திற்கும் செல்லும் வகையில், போக்குவரத்திற்கான வழிகாட்டுதல்களை இந்த மேப் காட்டுகிறது.  விண்டோஸ் போனில் கிடைக்கும், போன் இயங்கும் இடம் சார்ந்த அனைத்து வழி காட்டுதல்களும் இதில் கிடைக்கின்றன.  இதன் சிறப்பு அம்சங்கள்: இணைய இணைப்பின்றி, கார் ஓட்டும் போதும், நடந்து செல்லும் போதும், குரல் மூலம் வழி காட்டுதல், நூறு நாடுகளில் வழி காட்டும் வகையிலான வரைபடங்களை தரவிறக்கம் செய்து, அமைத்துக் கொள்ளும் வசதி மற்றும் 46 நாடுகளில், 766 நகரங்களில், பொதுத்துறை வாகனங்கள் செல்லும் வழி மற்றும் திசை காட்டும் வரைபடம் ஆகியவை ஆகும்.  ஆண்ட்ராய்ட் 4.1 மற்றும் அதன் பின்னர் வெளியான ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் கொண்ட சாம்சங் மொபைல் ஸ்மார்ட் போன்களில், இதனைப் பதிந்து இயக்

விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு செயல்பாடு

Image
ஸ்டார்ட் மெனு மீண்டும் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரப்பட்டிருப்பது, விண்டோஸ் பயனாளர்களுக்குப் பெரிய விஷயமாக இருந்தாலும், விண்டோஸ் 10ல் அதைக் காட்டிலும் சிறப்பான சில வசதிகள் தரப்பட்டுள்ளன.  இருப்பினும், ஸ்டார்ட் மெனுவில் தற்போது தரப்பட்டுள்ள வடிவமைப்பு அனைவரின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. முந்தைய ஸ்டார்ட் மெனுவின் வசதிகளைக் காட்டிலும் கூடுதலான வசதிகள் தரப்பட்டுள்ளது மட்டுமின்றி, அதன் வடிவமைப்பும் மிக எளிதாக அதனை இயக்குவதற்கு வழிகள் தருவதாக அமைந்துள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம். ஸ்டார்ட் மெனு தற்போது லைவ் டைல்ஸ் என்று அழைக்கப்படும், எப்போதும் இயக்கத்தில் உள்ள அப்ளிகேஷன்களின் நிலையைக் காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது.  இதன் வலது பக்க பிரிவில், நீங்கள் விரும்பும், அல்லது அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை பின் செய்து வைக்கலாம். விண்டோஸ் போன் மெனுவில், நாம் அடிக்கடி அழைப்பவரின் எண்ணை பின் செய்வது போல, இங்கு நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷனை பின் செய்து அமைக்கலாம்.  லைவ் டைல்ஸ் என்பவை உயிர்த்துடிப்புள்ளவை. அதாவது, அதன் இயக்கம் அந்த டைலில் காட்டப்பட்டு கொண்டே இருக்

ஸ்மார்ட்போன் உபயோகிப்பவருக்கு அதிர்ச்சி தகவல்

Image
ஸ்மார்ட்போன்கள், டேப்லட்களை இரவில் அணைத்துவிட்டுத் தூங்கவில்லை என்றால் தூக்கம் பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சியில்  தெரியவந்துள்ளது. அமெரிக்க நாட்டின் வேதியியல் சங்கத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிரையன் ஸோல்டோவ்ஸ்கி இது குறித்து கூறியிருப்பதாவது:- "நாம் இருக்கும் சூழல் இரவா அல்லது பகலா என்று அனிச்சையாக நாம் உணர்வதில் வெளிச்சத்தின் பங்கு முக்கியமானது. பொதுவாகவே, மாலை நேரம் செல்ல செல்ல புறச்சூழலில் சிவப்பு நிறம் அதிகரிக்கிறது. கண்ணின் ஆழப்பகுதியில் இருக்கும் செல்களில் உள்ள மெலனாப்சின் என்ற புரோட்டீன் மீது இந்த சிவப்பு நிறம் விழும்போது, ‘சூரியன் மறைந்துவிட்டது, என்று அந்த செல்கள், மூளைக்கு உத்தரவிடுகின்றன. எனவே, இரவு நேரம் என்றால் கண்ணில் சிவப்புநிற ஒளிதான் படவேண்டும். இந்த செயல்பாட்டை ஸ்மார்ட்போன்கள், டேப்லட்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றிலிருந்து வெளியேறும் நீல நிற ஒளியானது தொடர்ந்து கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தால், ‘இன்னும் இரவு வரவில்லை’ என்ற தவறான தகவலைத்தான் கண் செல்கள், மூளைக்குக் கடத்தும். ஏனென்றால், நீலநிறம் என்பது அதிகாலை நேரத்திற்கு உரிய

பேஸ்புக் வழங்கும் புத்தம் புது விருதுகள்

Image
அண்மையில் இந்தியாவிற்கு வருகை புரிந்த பேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க், இந்தியாவில் இணைய மேம்பாட்டிற்கென 10 லட்சம் டாலர் மதிப்பிலான உதவி அளிப்பதாக அறிவித்தார். பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் புலம் மாறும் உழைப்பாளர்கள் ஆகியோருக்கு, வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிடும் வகையில் உதவிடும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள், இணைய தளங்கள், இணையம் வழி சேவை ஆகியவற்றைக் கொண்டு வருவதில் இந்த நிதி பயன்படுத்தப்படும். புது டில்லியில் நடைபெற்ற இணைய கருத்தரங்கிற்கு வருகை புரிந்த போது இதனை மார்க் அறிவித்தார். இணைய இணைப்பு தரும் சக்தியும் திறனும் குறித்து விரிவாகப் பேசிய மார்க், தொழில் நுட்பம் என்பது குறிப்பிட்ட ஒரு சிலரின் தனி உரிமையாக இருக்கக் கூடாது. அது நம் சமுதாயம் அனைத்திற்கும் நன்மை தரும் ஒன்றாக இயங்க வேண்டும் என்று கூறினார்.  இந்தியா ஏற்கனவே அறிவியல், ஆய்வு மற்றும் தொழில் நுட்ப பிரிவுகளை ஏற்றுக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதே போல இணையத்தையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். ஏற்கனவே, இந்தியாவில் 24.3 கோடி பேர் இணையத்திலும், 10 கோடி பேர் பேஸ்புக்கிலும் இருந்தாலும், இ

பேஸ்புக் செய்திகளை மின்னஞ்சலில் பெற வேண்டுமா..?

Image
பேஸ்புக் மூலம் தகவல்களை அனுப்புவதை இமெயில் மூலம் பெறும் வசதியை அந்நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்ஆப் சேவையை வாங்கியப் பிறகு, தினந்தோறும் புதிய வசதிகளை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக பேஸ்புக் தகவல்களை இமெயில் உடன் இணைக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பேஸ்புக் மெயில்களுக்கு அனுப்பப்படும் பெரிய இமெயில்கள், தகவல்களில் இடம்பெறுவதற்குப் பதிலாக வாடிக்கையாளர்களின் அடிப்படை இமெயில்களுக்கு அனுப்பப்படும்.  மேலும், பேஸ்புக் மெயில்கள் மூலம் தகவல்களை தகவல் பலகைகளில் பார்வையிட மட்டுமே முடியும். மேற்கொண்டு அந்த தகவல்களைத் தொடர விரும்பினால், அனுப்பியவரின் தகவல் பலகைக்குச் சென்று புதிதாக டைப் அடித்து தொடர வேண்டும். நன்றி நிலவைத்தேடி

கணனியில் தகவல் நினைவூட்டும் மென்பொருள்..

Image
அடிக்கடி நமக்கு ஞாபகப்படுத்த வேண்டிய விஷயங்களை அல்லது சிறு குறிப்புக்களை எழுதி வைத்து அதனை அடிக்கடி பார்த்துக்கொள்ள  உதவுகின்றது Sticky Notes எனும் Windows கணனியில் தரப்பட்டுள்ள மென்பொருள். ஆனால் இது போன்ற ஒரு எளிமையான மென்பொருள் தமது Windowsகணனியில் இருப்பதனை அதிகமானவர்கள் அறிந்ததே இல்லை. இதனை திறந்து கொள்ள Start Menu சென்று Search பகுதியில் Sticky Notes என தட்டச்சு செய்க. இனி தோன்றும் Sticky Notes எனும் மென்பொருளை சுட்டுக. பிறகு உங்களுக்கு தேவையான குறிப்புக்களை எழுதி வைத்துக் கொள்ளும் வகையில் ஒரு இடைமுகம் தோன்றும். பின் அதில் உங்களுக்கு தேவையான குறிப்புக்களை அல்லது அடிக்கடி ஞாபகத்தில் இருக்க வேண்டிய விடயங்களை பதிந்து வைத்துக்கொள்ளலாம். இதில் நீங்க உருவாக்கும் எழுத்துக்களினது தோற்றத்தினை நீங்கள் விரும்பிய வகையில் அமைத்துக் கொள்ள பின்வரும் Keyboard Shortcut களை பயன்படுத்துங்கள். தடித்த எழுத்துக்களாக தோன்றச் செய்ய (Bold text) =====> Ctrl+B சரிந்த எழுத்துக்களாக தோன்றச் செய்ய (Italic text) =====> Ctrl+I எழுத்துக்களுக்கு Underlined செய்ய ==

ஒரு PDF பைலில் உள்ள கட்டுபாடுகளை நீக்க..

Image
ஒரு PDF பைலில் உள்ள கட்டுபாடுகளை நீக்க ஒரு அருமையான இலவச சேவையினை அளிக்கும் ஒரு இணையதளம் உள்ளது. பொதுவாக ஒரு சில PDF பைல் ஆனது பல்வேறு கட்டுபாடுகளை கொண்டு காணப்படும்., அதாவது, கிழேயுள்ள படத்தை பாருங்களேன்.. இதில் Allowed எனில் அந்த கட்டுப்பாடு விலக்களிக்கப்பட்டுள்ளது., Not Allowed எனில் அந்த கட்டுப்பாடு அந்த PDF பைலில் உள்ளது எனவும் அறியலாம். இது போல் Printing என்பது Not Allowed-ல் இருந்தால் அந்த PDF பைலை நம்மால் பிரிண்ட் எடுக்க முடியாது.  அந்த சமயத்தில் இந்த அணைத்து கட்டுபாடுகளையும் ஓர் PDF பைலில் இருந்து விளக்க ஒரு இணையதளம் இலவச சேவையினை தருகிறது. PDF Unlock   இந்த தளத்திற்கு சென்று நாம் PDF பைலை Unlock செய்யலாம். மூன்று வெவ்வேறு கிழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து பதிவேற்றம் (Upload) செய்து கொள்ள முடியும்.  1.My Computer 2. Dropbox 3. Google Drive நமது unlock செய்ய வேண்டிய PDF பைலானது நமது கணினியில் உள்ள நிலையில் நாம் My Computer என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ள வேண்டும். Unlock செய்ய விரும்பும் PDF பைலை தேர்வு செய்து Open என்ற ப