Posts

Showing posts from May, 2014

கூகுள் கார் சோதனை ஓட்டம்

Image
    ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார்களின் சோதனை ஓட்டம் அமெரிக்காவில் நடைபெற்றது. பிரபல இனையதள நிறுவனம் கூகுள்லின் தயாரிப்பான இந்த கார்கள் சாலைகளில் பயணித்து பிரமிப்பை ஏற்படுத்தின. கலிபோர்னியா பகுதியில் மௌன்டைன் வியுவ் பகுதியில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் நான்கு கார்கள் பங்கேற்றன. முற்றிலும் லேசர், சென்சார் தொழில்நுட்பத்துடன் இயங்கும் கார்களில் முன்கூட்டியே நாம் செல்ல திட்டமிட்ட இடங்களை கணினியில் பதிவு செய்யப்படும். அதன் பின் கார்கள் பொறப்பட்டு சாலைகளில் உள்ள சிக்னல்களில் நின்றும் வாகனத்துடன் பயின்றும் திட்டமிட்ட இடங்களுக்கு செல்கின்றன. ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார்களின் சோதனை ஓட்டம் தங்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியதாக கூறிய கூகுல் நிறுவனம், எதிர்காலத்தில் இது போன்ற கார்களை தயாரித்து விற்பனை செய்யப்படுமா என்ற தகவலை கூற மறுத்துவிட்டது. அதே நேரம் இதைப்பற்றிய தொழில்நுட்பம் வரும் 2017ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.  நன்றி நிலவைத்தேடி

இலவச மென்பொருள் டவுன்லோடு செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

Image
  இணையம் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது. இதில் நமக்கு தேவையான வீடியோக்கள் மற்றும்  மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கம் செய்து உபயோகிக்கின்றோம். ஆனால் இப்படி இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களினால் நம்முடைய கணனி பாதிப்பு அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ. 1. இலவசம் என்று கூறியதும் அதிக மென்பொருட்களை நம் கணனியில் இன்ஸ்டால் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் மட்டும் கணனியில் பதிந்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளால் ஒருமுறை மட்டும் தான் பயன் என்று இருந்தால் இதற்கு அந்த மென்பொருளை தரவிறக்க வேண்டியதில்லை. ஓன்லைனிலேயே இந்த வசதியை செய்து கொள்ளலாம். 2. எந்த இலவச மென்பொருளையும் அதனுடைய தயாரிப்பு இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் அவர்களின் மென்பொருளை பற்றி அவர்கள் உயர்த்தியே சொல்லுவார்கள். ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது. 3. தகுதி வாய்ந்த தளங்களில்

இப்போதைக்கு ஆண்ட்ராய்ட் இல்லை

Image
டிஜிட்டல் உலகில் இப்போதைய பரபரப்பு ஸ்மார்ட் வாட்ச்களாகும். முதன் முதலில் சோனி நிறுவனம் தான் ஸ்மார்ட் வாட்ச்களைத் தயாரித்து, இரண்டு மாடல்களை வெளியிட்டது. ஆனால், இவை இரண்டும் அவ்வளவாக மக்களைச் சென்றடையவில்லை. சோனி ஸ்மார்ட் வாட்ச், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினை தன் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகப் பயன்படுத்தவில்லை. சென்ற வாரம், கூகுள் நிறுவனம் தன்னுடைய ஆண்ட்ராய்ட் வேர் எஸ்.டி.கே. (Android Wear SDK) என்ற சிஸ்டத்தினை ஸ்மார்ட் வாட்ச்களுக்கென அறிமுகப்படுத்தியபோது, எல்.ஜி. மற்றும் மோட்டோ நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட் வாட்ச்களை அறிவித்தன. ஆனால், சோனி நிறுவனம் தன் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தவிர்த்து, தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத் தினையே பயன்படுத்த இருப்பதாக அறிவித்தது. தன் நிறுவனம், தன்னுடைய சிஸ்டத்தினைத் தயாரிக்க பலரின் முயற்சிகளையும், பணத்தினையும் செலவழித்திருப்பதாகவும், எனவே அதனையே தொடர்ந்து பயன்படுத்த முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தது. இருப்பினும் தன் ஸ்மார்ட் வாட்ச்களில், ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து யோசிக்கும் எனவும் கூறியுள்ளது. நன்றி  தெரிந்துக

ஸ்கைப்பில் இனி குரூப் வீடியோ வசதி

Image
    ஒருவருக்கொருவர் திரையில் கண்டு பேசி மகிழ்ந்து கொள்ள உதவும் அப்ளிகேஷன் புரோகிராம்களில், பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஸ்கைப் ஆகும். இதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கி, அதில் மேம்படுத்துதலைக் கொண்டு வந்துள்ளது. இதில் அக்கவுண்ட் கொண்டுள்ள எவரும், இணைய தொடர்பு கொண்டு, வீடியோ காட்சியாக ஒருவொருக்கொருவர் பார்த்துக் கொண்டு பேசலாம். இருவருக்கு மேலானவர்கள் ஒரே நேரத்தில் கலந்துகொண்டு பேச, மாதம் ஒன்றுக்கு 10 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இதனை பிரிமியம் அக்கவுண்ட் என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. இதில் குறிப்பிட்ட இடங்களுக்கு, நேரடியாக தொலைபேசி எண்களையும் அழைத்து பேசும் வசதியும் உண்டு. இப்போது இந்த வசதிகளில், குழுவாக வீடியோ காட்சிகளை அமைத்துப் பயன்படுத்தும் வசதியினை, மைக்ரோசாப்ட் இலவசமாக வழங்குகிறது. மூன்று முதல் பத்து நபர்கள் வரை ஒரே நேரத்தில் இணைந்து பேசலாம். நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் சாதனம் மற்றும் இணைய இணைப்பினைப் பொறுத்து இதன் தன்மை அமையும். இருப்பினும், ஒரே நேரத்தில் ஐந்து பேர் வரை பேசுவதே சிறப்பாகும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. விண்டோஸ் டெஸ்க்டாப், மேக் மற்

கணனியில் ஹெட் கிராஷ் பற்றி அறிய வேண்டுமா..?

Image
    ஹெட் கிராஷ் (Head Crash): என்பது, கம்ப்யூட்டரில் இயங்கும் ஹார்ட் ட்ரைவில் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்பைக் குறிக்கும். முற்றிலும் சேதமடைந்த நிலையையும் இந்த சொல் விளக்குகிறது. ஹார்ட் டிஸ்க்கில் இந்த நிலை ஏற்படக் காரணம், அதில் சேரும் தூசுகள், தவறாக வடிவமைக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க் பகுதிகள், ஹார்ட் ட்ரைவ் ஏற்றுக் கொள்ள முடியாத உஷ்ணம், சரியாகப் பொருத்தாத நிலை போன்றவையாக இருக்கலாம். இவற்றால், ஹார்ட் டிஸ்க்கின் எழுதும் படிக்கும் ஹெட், டிஸ்க்குடன் சரியாகத் தொடர்பு ஏற்படுத்த இயலாமல், ஸ்கிராட்ச் ஏற்படுத்தலாம். அல்லது டிஸ்க்கினை எரிக்கலாம். இதனால், அதில் உள்ள டேட்டா முழுவதுமாக அழிக்கப்படலாம். ரெசல்யூசன் (Resolution): மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அளவு அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024 x 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots per inch) டீடெ

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அரசு எச்சரிக்கை

Image
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசு நிர்வாகம், தன் மக்களை இன் டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டினை உடனடியாக நிறுத்தச் சொல்லி எச்சரிக்கை வழங்கியுள்ளது. இந்த பிரவுசரில் காணப்படும் மோசமான குறியீட்டுப் பிழையின் மூலம், கம்ப்யூட்டர் தகவல்களைத் திருடும் புரோகிராம்கள் எளிதாக நுழைய முடியும் எனவும், இந்த பிழைக் குறியீட்டினைச் சரி செய்திடும் பேட்ச் பைல் தரப்படும் வரை, யாரும் இந்த பிரவுசரைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில், இணையப் பயன்பாட்டினைக் கண்காணித்து அவ்வப்போது தேவையான எச்சரிக்கைகளை US Computer Emergency Readiness Team என்ற அமைப்பு வழங்கி வருகிறது. பிரிட்டனிலும் இதே அமைப்பு இயங்கி வருகிறது. பொதுவாக, பிரவுசர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளில், இந்த அமைப்புகள் எதுவும் சொல்வதில்லை. பிரவுசர் பயன்பாடு குறித்து முதல் முதலாக இது போன்ற எச்சரிக்கை அறிவிப்பினை இரண்டு அமைப்புகளும் வழங்கியுள்ளன. இந்த பிழை குறியீடு என்னவென்று இன்னும் அறியப்படாததால், இதனை zeroday exploit எனக் குறிப்பிட்டுள்ளனர். இதன் வழியாக, ஹேக்கர்கள் எளிதாகக் கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களை,

இணைத்த நோக்கியா இளைத்தது ஏன்?

Image
முதன் முதலில் மொபைல் போன்கள் மக்களை அடைந்த போது அனைவரின் மனதிலும் இருந்த ஒரு பெயர் நோக்கியா.  பின்லாந்து நாட்டில் எஸ்போ (Espoo) நகரில் தன் தலைமை இடத்தைக் கொண்டு, பன்னாடுகளில் கிளைகளை அமைத்து, மொபைல் போன்களை அனைத்து நிலை மக்களுக்கும் என தயார் செய்து வளர்ந்து, உயர்ந்த நிறுவனம் நோக்கியா.  கடந்த 12 ஆண்டுகளாக மொபைல் போன் பயன்படுத்தும் அனைவரும், நோக்கியா போனில் தான் முதன் முதலில் தொடங்கி இருப்போம்.  பச்சை நிறப் பின்னணியில், ஒரே நிற எழுத்துக்களோடும், தெளிவான அழைப்பு பரிமாற்றங்களுடனும், ஸ்நேக் என்னும் விளையாட்டுடனும் நமக்குக் கிடைத்த நோக்கியாவை ஒரு பொக்கிஷமாகவே தொடர்ந்து கருதி வந்திருக்கிறோம்.  கையில் எடுத்துச் சென்று பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனமாக, நோக்கியா போன்கள் தான் முதலில் நமக்கு அறிமுகமாயின.  இன்று அதற்கு விடை கொடுத்துவிட்டோம். நோக்கியாவினை முழுமையாக, மைக்ரோசாப்ட் சென்ற ஏப்ரல் 25 அன்று தனதாக்கிக் கொண்டது. அதற்கு Microsoft Mobile Oy எனப் பெயர் சூட்டியுள்ளது.  மிக நன்றாக இயங்கும் வலிமையான நிறுவனங்கள் கூட ஒரு நாளில் விழலாம் என்ற படிப்பினையை நாம் நோக்கியாவிடமிரு

மொபைலை வயர்லெஸ் மூலம் சார்ஜ் செய்யலாம்

Image
கொரியாவைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர்கள், ஒரே நேரத்தில், 16 அடி தூரத்தில் வைத்து 40 ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்து, சாதனை படைத்துள்ளனர்.  கொரியா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தைச் சேர்ந்த (Korean Advanced Institute of Science and Technology (KAIST) இந்த வல்லுநர்கள், டயபோல் காயில் ரெசனண்ட் சிஸ்டம் ("Dipole Coil Resonant System” (DCRS))) என்ற ஒன்றை இதற்கென உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர். இது ட்ரான்ஸ்மிட்டருக்கும், மின் சக்தியை ஏற்றுக் கொள்ளும் சாதனத்தில் உள்ள காயில்களுக்கும் இடையே செயல்பட்டது.  வயர் இணைப்பு எதுவும் இன்றி, மின்சக்தியைக் கடத்தும் ஆய்வு தற்போது பல பல்கலைக் கழகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலில், 2007 ஆம் ஆண்டில், எம்.ஐ.டி. என அழைக்கப்படும், உலகின் முன்னணி பொறியியல் ஆய்வு மையமான மாசசுசட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Massachusetts Institute of Technology (MIT)) இந்த வகையில் முதல் ஆய்வினை மேற்கொண்டது. பின்னர், பல பல்கலைக் கழகங்கள் இதனைத் தொடர்ந்தன. இவர்களில், கொரியன் ஆய்வு மையம், குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது. இனி, வீடுகளில் வை-பி

டிஜிட்டல் உலகில் பரபரப்பு ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்

Image
டிஜிட்டல் உலகில் இப்போதைய பரபரப்பு ஸ்மார்ட் வாட்ச்களாகும். முதன் முதலில் சோனி நிறுவனம் தான் ஸ்மார்ட் வாட்ச்களைத் தயாரித்து,  இரண்டு  மாடல்களை வெளியிட்டது. ஆனால், இவை இரண்டும் அவ்வளவாக மக்களைச் சென்றடையவில்லை. சோனி ஸ்மார்ட் வாட்ச், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினை தன் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகப் பயன்படுத்தவில்லை. சென்ற வாரம், கூகுள் நிறுவனம் தன்னுடைய ஆண்ட்ராய்ட் வேர் எஸ்.டி.கே. (Android Wear SDK) என்ற சிஸ்டத்தினை ஸ்மார்ட் வாட்ச்களுக்கென அறிமுகப்படுத்தியபோது, எல்.ஜி. மற்றும் மோட்டோ நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட் வாட்ச்களை அறிவித்தன. ஆனால், சோனி நிறுவனம் தன் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தவிர்த்து, தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத் தினையே பயன்படுத்த இருப்பதாக அறிவித்தது. தன் நிறுவனம், தன்னுடைய சிஸ்டத்தினைத் தயாரிக்க பலரின் முயற்சிகளையும், பணத்தினையும் செலவழித்திருப்பதாகவும், எனவே அதனையே தொடர்ந்து பயன்படுத்த முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தது. இருப்பினும் தன் ஸ்மார்ட் வாட்ச்களில், ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து யோசிக்கும் எனவும் கூறியுள்ளது. நன்

பேஸ்புக்கை பற்றி நாம் உணர வேண்டியவை

Image
கடந்த சில ஆண்டுகளாக, அபரிதமான வளர்ச்சி பெற்று, பேஸ்புக், அனைவரின் வாழ்க்கையோடு இணைந்து இயங்கி வருகிறது. பல பயனாளர்கள், இது ஓய்ந்து போகக் கூடாதா என்று எண்ணி வந்தாலும், எந்த வகையிலும் இது நம்மை விட்டுப் போகாது என்ற நிலையில் தான், பேஸ்புக் செயல்பாடும் அதன் பயனாளர்களும் உள்ளனர். ஏனென்றால், மனிதனின் பலவகையான தேவைகளை அது நிறைவு செய்கிறது. நம்மை உற்சாகப்படுத்துகிறது, எண்ணங்களைச் செலுத்துகிறது, எரிச்சலையும் தருகிறது, மனச்சோர்வையும் அளிக்கிறது - ஆம் அனைத்து வகையான உணர்வுகளையும் தருகிறது. பேஸ்புக் ஒரு மனிதனின் உள்ள உணர்வோட்டங்களை மாற்றி அமைக்கிறது.  இது மனிதனை உற்சாகப்படுத்துகிறதா? இல்லை, ஊனப்படுத்துகிறதா என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதைத்தான் இன்றைய சமூக உளவியலாளர்கள், பேஸ்புக் குறித்து கூறி வருகின்றனர். தங்கள் ஆய்வையும் இந்த காரணங்களைச் சுற்றியே அமைத்துள்ளனர். இங்கு பேஸ்புக் நமக்கு எவ்வாறு நல்லதைச் செய்திடும் எனப் பார்க்கலாம். நாம் அறியப்பட வேண்டும் என்ற உணர்வு: பள்ளிக் கூடங்களில் பயிலும்போது, நாம் விளையாடுகிறோமோ இல்லையோ, விளையாட்டு அணியில் நாம் இடம் ப

லேப்டாப் பேட்டரி நீண்ட நாள் உழைக்க என்ன செய்யலாம்

Image
டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையே, இப்போது அதிகம் பயன்பாட்டில் உள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு அரசே லேப் டாப் கம்ப்யூட்டரை வழங்குவதனால், நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக லேப்டாப் இடம் பிடித்துள்ளது. லேப் டாப் கம்ப்யூட்டர் ஒன்றின் பேட்டரி, அதன் செயல்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. இதனைப் பயன்படுத்தும் வழிகளைச் செம்மைப் படுத்தும் சில குறிப்புகளை இங்கு காணலாம். நீங்கள் பேட்டரி பவரில் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், எந்த அளவிற்கு கம்ப்யூட்டரின் ப்ராசசர் அதிகம் பயன்படுத்தப்படுகிறதோ, அந்த அளவிற்கு, பேட்டரியின் மின் சக்தி விரைவில் தீர்ந்துவிடும் என்பதனை உணர்ந்திருப்பீர்கள். அதற்காக, நாம் லேப்டாப்பில் மேற்கொள்ளும் பணிகளைக் குறைத்துக் கொள்ள முடியாது. இந்நிலையில், நாம் விண்டோஸ் சிஸ்டத்திடம், ப்ராசசரின் செயல்பாட்டின் தீவிரத்தினை எந்த அளவிற்கு அனுமதிக்கலாம் என்பதனை செட் செய்திடலாம். இது கம்ப்யூட்டர் செயல்பாட்டின் வேகத்தினைச் சற்றுக் குறைக்கலாம். எனவே, முதலில் சோதனை அடிப்படையில், இதனை முதலில் பார்க்

எக்ஸெல்லில் பெர்சனல் தகவல்களை மறைப்பது எப்படி

Image
பார்மட்டிங் ஷார்ட்கட்: எக்ஸெல் செல் ஒன்றில், அதன் தகவல்களைத் தனியே பார்மட்டிங் செய்கையில், ஒவ்வொன்றுக்கும் மெனுவிற்குச் செல்ல வேண் டாம். இந்த ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்துங்கள். முதலில் பார்மட் செய்திட வேண்டிய செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் Ctrl + Shift + ! அழுத்தினால் செல்லில் 50 என உள்ள எண்ணை 50.00 என மாற்றும். Ctrl + Shift + % என்ற கீ இணைப்பு .75 என்பதை 75% என மாற்றும். Ctrl + Shift + @ என்ற கீகளை இணைத்து அழுத்தினால் 15.45 என்ற நேரக் குறியீட்டை 3:45 PM என மாற்றும். Ctrl + Shift + # என்ற கீகள் 11/4/2007 என்ற நாள் குறியீட்டை 4Nov07 என மாற்றும். Ctrl + Shift + $ என்ற கீகள் 50 என உள்ள எண்களை கரன்சியுடன் ($50.00) சேர்த்துக் காட்டும். பெர்சனல் தகவல்களை மறைக்க: எக்ஸெல் தொகுப்பில் புதிய ஒர்க்ஷீட்களை உருவாக்கி, அவற்றில் டேட்டாவினைப் பதிகையில், அந்த ஒர்க்ஷீட் பைலில், நம்முடைய பெர்சனல் தகவல்களும் இணைக்கப்படுகின்றன. பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வகையில் இவை பதியப்படும். இதனால், பைல் ஒன்றை யார் உருவாக்கியது போன்ற தகவல்கள் அனைவருக்கும் தெரிய வரும். இந்த தகவல்களை ஒவ்வொரு பைலின

போட்டோக்களை சுழற்றுவது எப்படி

Image
போட்டோக்களைச் சுழற்றி நாம் விரும்பும் வகையில் அமைக்க எண்ணினால், மவுஸ் மற்றும் போட்டோ வியூவர் அப்ளிகேஷனில் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்துவோம். இதற்குப் பதிலாக, நாம் கீ போர்ட் ஷார்ட்கட் கீகளையும் பயன்படுத்தலாம். விண்டோஸ் 7 தொகுப்பில், கேமரா அல்லது மெமரி ஸ்டிக்கிலிருந்து, போட்டோக்களைக் கம்ப்யூட்டருக்கு காப்பி செய்கிறோம். செய்த பின்னர், சில போட்டோக்களை, திரையில் சரியாகப் பார்க்க வேண்டி, சற்று சுழற்ற வேண்டியதிருக்கும். ஏனென்றால், அவை போர்ட்ரெய்ட், லேண்ட்ஸ்கேப் என எந்த கோணத்திலும் எடுக்கப்பட்டிருக்கலாம்.இதனை எக்ஸ்ப்ளோரர் விண்டோவில் இருந்தபடியே மேற்கொள்ளலாம். போட்டோக்களை காப்பி செய்த பின்னர், எக்ஸ்புளோரர் விண்டோவில், அவை இருக்கும் போல்டரைத் திறக்கவும். பின்னர், மாற்றம் செய்யப்பட வேண்டிய போட்டோவினைத் தேர்ந்தெடுக்கவும். போட்டோவின் சிறிய பிரிவியூ, டாஸ்க்பாரில் இடது ஓரம் காட்டப்படும். இனி, பைல் மீதாக ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், "Rotate clockwise” அல்லது "Rotate counterclockwise” என்பதில், உங்கள் தேவைக்கேற்ப கிளிக் செய்திடவும். போட்டோக்கள் திசை மாறுவதனை, டாஸ

டாகுமெண்ட் பதிந்த தேதியை பார்பது எப்படி

Image
  வேர்ட் புரோகிராமில், ஒவ்வொரு முறை நீங்கள் டாகுமெண்ட் ஒன்றினை சேவ் செய்திடுகையில், அந்த டாகுமெண்ட் குறித்த சில விஷயங்கள் தானாகவே அற்றைப்படுத்தப்படுகின்றன. இதில் ஒரு தகவல், அதனை இறுதியாக எடிட் செய்த தேதியாகும்.  இந்த தேதியை, அந்த டாகுமெண்ட்டிலும் பதியச் செய்திடலாம். அதனையும் தானாக அப்டேட் செய்திடும் வகையில் செட் செய்திட லாம். இதற்குக் கீழே கண்டுள்ளபடி செயல்படவும். 1. உங்கள் கர்சரை டாகுமெண்ட்டில் எந்த இடத்தில், இறுதியாக எடிட் செய்த தேதி காட்டப்பட்டு, ஒவ்வொரு முறையும் அப்டேட் ஆக வேண்டுமோ, அந்த இடத்தில் வைக்கவும். 2. வேர்ட் ரிப்பனில் டேப்பினைக் கிளிக் செய்து அப்பிரிவினைக் காட்டவும். 3. இதில் உள்ள டெக்ஸ்ட் குரூப்பில் (Text group) Quick Parts என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர், Fields என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் Field டயலாக் பாக்ஸைக் காட்டும். 4. டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள பீல்ட் வகைகளில் Date and Time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 5. இங்கு வலது பக்கத்தில் உள்ள பீல்ட் பட்டியலிலிருந்து Save Date என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.  6. தேதி

சந்தையை கலக்கும் NOD மவுஸ்

Image
உலகில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக அனைத்து துறைகளிலும் நானோ தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்களில் நானோ தொழில்நுட்பம் பயன்பாடு அதிகரித்துள்ளது. இன்றைய (டேபுள் கம்யூட்டர்கள்) கணிப்பொறிகள் இயங்குவதில் மவுஸ் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கனிப்பொறி திரையில் நமக்கு தேவையானவற்றை நேரடியாக தேர்வு செய்ய மவுஸ் பயன்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள மவுஸ்கள் மனிதனின் உள்ளங்கை அளவில் உள்ளது. வயர் இணைப்பு, புளூடூத் போன்ற இணைப்புகள் மூலமாக இந்த மவுஸ்கள் செயல்படுகின்றன. தனிநபர் கனிப்பொறி மற்றும் லேப்டாப்களில் கூட இந்த மவுஸ்களின் பயன்பாடு இருந்து வருகிறது. ஆனாலும் உள்ளங்கை அளவு இருந்த மவுசின் வடிவம் மட்டும் மாறாமல் இருந்தது. தற்போது அதுவும் மாறிவிட்டது. உள்ளங்கை அளவில் இருந்த மவுஸ், விரலில் மாட்டும் மோதிரத்தின் அளவுக்கு மாறிவிட்டது. புளூடூத் வசதியுடன் இயங்கும் இந்த மோதிரம் மவுசிற்கு ' NOD மவுஸ் ' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை கனிப்பொறியில் உள்ள புளூடூத்துடன் இணைத்து, பின்னர் விரலில் மாட்டிக் கொண்டு

பென்டிரைவில் மறைந்த கோப்புகளை மீட்பது எப்படி

Image
இன்றையை மென்பொருள் உலகத்தில் பென் டிரைவ் என்றழைக்கப்படும் தகவல் சேமிக்கும் கருவி இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.  பென்டிரவைகள் ஒரே கனிப்பொறியில் பயன்படுத்தாமல், தேவைப்படும் இடங்களிலெல்லாம், அங்குள்ள கனிப்பொறிகளில் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு செய்யும் போது பென்டிரைவை, கம்யூட்டர் வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது.  ஒருவேளை பென்டிரைவை வைரஸ் தாக்கினால் அதில் உள்ள தகவல்கள் மறைந்துவிடும். அவ்வாறு மறைந்துவிட்டால், பென்டிரைவை கணிப்பொறியுடன் இணைக்கும் போது அதில் தகவல்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை மட்டும் காட்டும். எனவே இழந்த தகவலை மீட்டெடுக்க கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றலாம். 1. முதலில் கணிப்பொறியில் Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும் 2. இப்பொழுது பென்டிரைவ் எந்த டிரைவில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள் My Computer செல்வதன் மூலம் இதை உறுதிசெய்யலாம். 3. உதாரணமாக E: டிரைவில் பென்டிரைவ் உள்ளது என்றால் நீங்கள் E: என டைப் செய்து Enter பட்டனை அழுத்தவும். 4. attrib h s r /s /d *.* என டைப் செய்யவும். ஒவ்வொரு பகுதியை டைப் செய்யும் போதும் சரியான முறையில் Space

சாம்சங்கை மிரட்டும் மோட்டோ ஜி

Image
இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன். இதற்கு  அடுத்தபடியாக சாம்சங் நிறுவனம் உள்ளது. ஆனால் இரண்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் பெரிய அளவிலான வித்தியாசங்கள் தொழில்நுட்ப வித்தியாசங்கள் இருக்காது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் தங்களின் தொழில்நுட்பத்தை சாம்சங் நிறுவனம் காப்பியடித்ததாக வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றது. இருப்பினும் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போனை காட்டிலும் சாம்சங் நிறுவனத்தின் போன்கள் விற்பனையில் சக்கைபோடு போட்டுவருகின்றன. இதனால் தங்களை அடித்துக்கொள்ள ஆளில்லை என்று பெருமை பாடிக்கொண்டிருந்த சாம்சங் நிறுவனம், சமீபத்தில் வெளியான மோட்டரோலா நிறுவனத்தின் மோட்டோ-ஜி வகை ஸ்மார்ட் போன்களை கண்டு மிரண்டு போயுள்ளது. இதற்கு காரணம் சாம்சங் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களில் உள்ள அனைத்து நவீன வசதிகளும், மோட்டரோலா நிறுவனத்தில் மோட்டோ-ஜி போனில் உள்ளது. ஆனால் விலை வெறும் 12 ஆயிரம் மட்டுமே. இதனால் அறிமுகப்படுத்திய சில வாரங்களிலேயே அனைத்து போன்களும் விற்றுத்தீர்ந்தது. மோட்டோ-ஜ