Posts

Showing posts from March, 2014

விண்டோஸ் XPயிலிருந்து விண்டோஸ் 7 மாற வேண்டுமா..?

Image
விண்டோஸ் எக்ஸ்பிக்கான சப்போர்ட் பைல்கள் இனி கட்டாயமாக நிறுத்தப்படும் என, அதற்கான நாளை (ஏப்ரல் 8) மைக்ரோசாப்ட் அறிவித்ததிலிருந்து, பல எக்ஸ்பி வாடிக்கையாளர்கள், விண்டோஸ் 7க்கு மாறி வருகின்றனர். இந்த இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கும் இடையே பல வேறுபாடுகளை அவற்றின் செயல்பாட்டில் காணலாம். இவற்றைப் புரிந்து கொண்டால், சிஸ்டம் மாறுவது எந்த பிரச்னையையும் தராது. மேலும், வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதால், இயக்குவது எளிமையாகவும், கூடுதல் பலன்களைத் தருவதாகவும் அமையும். விண்டோஸ் 7 மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலிருந்து மாறுபாடுகள் கொண்டதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 13 ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்த எக்ஸ்பியுடன் ஒப்பிடுகையில், அதிக வேறுபாடுகளைக் காணலாம். இருப்பினும், எக்ஸ்பிக்குப் பின்னால், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்வியுடன் பார்த்தால், விண்டோஸ் 7 ஒரு பயனுள்ள சிஸ்டமாகவே இருக்கிறது. கூடுதல் பாதுகாப்பு, நவீன தொழில் நுட்பத்துடன் இணைந்த செயல்பாடு, கூடுதல் சக்தி என இதனைச் சுருக்கமாகக் கூறலாம். இவற்றைத் தரும் சில அம்சங்களை இங்கு காணலாம். 1. டாஸ்க

எத்திகல் வோர்ம் பற்றி தெரியுமா?

Image
Worm என்ற பெயர் இது வைரஸின் ஒரு பிரிவாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பலாம். இது தீமை விளைவிக்கும் புரோகிராம் அல்ல. இதன் செயல்படும் தன்மை, வைரஸ் ஒன்றின் செயல்பாட்டின் சாயலை ஒத்திருப்பதால், இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த புரோகிராம், நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களைத் தேடி, அவற்றில் ஏதேனும் ஒரு சாப்ட்வேர் அப்டேட் செய்யப்பட வேண்டியதிருந்தால், பயனாளருக்குத் தெரியாமலேயே அதனை அப்டேட் செய்திடும். அதே போல பிழைக் குறியீடுகளுக்கான பேட்ச் பைல் டவுண்லோட் செய்து அமைக்கப்படாமல் இருந்தால், அதனையும் இயக்கி வைக்கும். நன்றி நிலவைத்தேடி

எக்ஸெல்லில் என்டர் கீ என்ன செய்யும்

Image
எக்ஸெல் என்டர் கீ: எக்ஸெல் தொகுப்பில் என்டர் கீ அழுத்தினால், வழக்கத்திற்கு மாறான செயல்பாடு மேற்கொள்ளப்படுவதனைக் காணலாம். செல் ஒன்றில் டேட்டாவினை அமைத்துவிட்டு, என்டர் கீ அழுத்தினால், அந்த டேட்டாவினை செல்லில் அமைத்த கையோடு, கர்சர் அதே நெட்டு வரிசையில் கீழே உள்ள செல்லுக்குச் செல்லும். இவ்வாறு இல்லாமல், என்டர் கீ அழுத்துவதன் மூலமாக மேற்கொள்ளப்படும் பணியினை நீங்கள் விரும்பும் வகையில் மேற்கொள்ளுமாறு செய்திடலாம். பொதுவாக செல் ஒன்றில் டேட்டாவினை என்டர் செய்தவுடன், என்டர் கீயினை அழுத்துவது வழக்கமான வேலையாகும். அவ்வாறு செய்திடுகையில் உங்கள் விருப்பப்படி என்டர் கீக்கான பணியை நிர்ணயம் செய்திடலாம். ஒன்றுமே நடக்காத படி செய்திடலாம். அல்லது கீழே உள்ள செல்லுக்குக் கர்சர் செல்லாமல், பக்கத்தில் உள்ள செல்லுக்குச் செல்லும்படி அமைத்திடலாம். இதற்கான வழிகள்: 1. டூல்ஸ் மெனு சென்று ஆப்ஷன்ஸ் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் ஆப்ஷன் டயலாக் பாக்ஸினைத் தரும். 2. இதில் உள்ள டேப்களில் எடிட் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். 3. Move Selection After Enter என்ற வரி அருகே உள்ள செக் பாக்ஸைக் காணவு

விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஏப்ரல் 8ம் தேதி கல்லறை

Image
மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி வரும் சேவை வரும் ஏப்ரல் 8ம் தேதி உடன் நிறுத்தப்பட உள்ளது. இந்த நடவடிக்கையால் ஏடிஎம் சேவைகள் உட்பட, வங்கி சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் 2001ம் தேதி வெளியிடப்பட்டு 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் ஏப்ரல் 8ம் தேதி உடன் அதனுடைய பயன்பாட்டை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இயங்கு தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு தொழில்நுட்ப சேவைகளையும் மைக்ரோசாஃப்ட் வரும் 8ம் தேதியுடன் நிறுத்திக் கொள்ள உள்ளது. ஏடிஎம் சேவைகள் உட்பட, கணினிகளிலும் தற்போது வரை விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கிக் கொண்டிருந்தால் அதனை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை செய்துள்ளது. நன்றி நிலவைத்தேடி

அபாயத்தை எதிர்நோக்கி 50 கோடி கம்ப்யூட்டர்கள்

Image
விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான பாதுகாப்பு வசதிகள் அனைத்தையும், வரும் ஏப்ரல் 8 முதல் நிறுத்திக் கொள்ளப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்து, தொடர்ந்து எச்சரிக்கையும் கொடுத்து வருகிறது.  இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, பலரின் பிரிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இயங்கி வந்த, இயங்கிக் கொண்டிருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை முடிவுக்குக் கொண்டு வர மைக்ரோசாப்ட் பல ஆண்டுகள் முடிவெடுத்து, தற்போது அதன் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டது. பல கணக்கெடுக்கின்படி, ஏறத்தாழ 48.8 கோடி கம்ப்யூட்டர்கள் எக்ஸ்பியில் இயங்குவதாக தெரிகிறது. மிகச் சரியாக எத்தனை கம்ப்யூட்டர்கள் என்று, மைக்ரோசாப்ட் நிறுவனம் மட்டுமே சொல்ல முடியும்.  இது ஒரு பெரிய எண்ணிக்கையாகத் தோன்றினாலும், அனைத்து நாடுகளிலும் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டரில், இவை ஏறத்தாழ 30 சதவீதம் மட்டுமே என Net Applications என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.  அப்படியானால், இவ்வளவு எண்ணிக்கையிலான கம்ப்யூட்டர்களையா, வைரஸ்களை பரப்பும் ஹேக்கர்களின் பசிக்கு இரையாக்க மைக்ரோசாப்ட் முடிவெடுத்துள்ளது என்று பலரும் எண்ணத் தொடங்கி உள்ளனர்.

இந்தியாவிற்கான கூகுள் திட்டங்கள் ஒரு பார்வை..

Image
இணையத்தோடு எங்கும் நிறைந்த ஒன்றாக, கூகுள் செயல்பட்டு வருகிறது. ""இதன் முழுப் பயனை இந்திய மக்கள் அனுபவித்துப் பயன் பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்'' என தங்களின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் குறிப்பிடுகையில் கூகுள் இந்தியா பிரிவின் தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.  அதிக எண்ணிக்கையில், தொடர்பில் உள்ள மக்களைக் கொண்டிருக்கும் நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தை இந்தியா கொண்டுள்ளது. தற்போது ஸ்மார்ட் போன் முதல் இணையதளங்கள் வரை எங்கும் தன் செயல்பாட்டினை விரித்துக் கொண்டு கூகுள் செயல்பட்டு வருகிறது. இந்திய டிஜிட்டல் வெளியில், கூகுள் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அண்மையில் இவர் உரையாற்றினார். 1. இணைய இணைப்பில் இன்னும் பலர்: மொபைல் போன் வழி இணைய இணைப்பினை மேற்கொள்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கெனப் பயன்படும் ஸ்மார்ட் போன்கள் இந்த ஆண்டில் 7 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கு அடுத்தபடியாக, டேப்ளட் பி.சி.க்களின் பயன்பாட்டினை மக்களிடம் அதிகரிக்கச் செய்திட வேண்டும். 2014ல் இது ஏற்படும் சாத்தியக் கூறுகள

இந்தியாவின் முதல் 4K வீடியோவை வெளியிட்டது சோனி நிறுவனம்

Image
இதுவரை இந்தியாவில் Full HD எனப்படும் 1080p வகை வீடியோக்களை மட்டுமே ரசித்து வந்த நமக்கு முதல் முறையாக 4K UHD (2160p) வகை வீடியோவை முதல் முறையாக YouTubeஇல் அறிமுகம் செய்துள்ளது சோனி நிறுவனம்.  “பாலிவுட் படங்கள் கூட இதுவரை 4K குவாலிட்டியை முயற்சி செய்யாமல் இருக்க முதல் முறையாக நாங்கள் தான் இந்தியாவில் YouTubeமூலம் இதை கொண்டு வந்துள்ளோம்” என்று சோனி நிறுவன மார்கெட்டிங் டைரக்டர் Sanujeet Bhujabal தெரிவித்துள்ளார். அப்படி என்ன பெரிய வித்தியாசம் என்று கேட்பவர்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள். மேலே உள்ளவற்றின் ரெசொல்யூசன்களை கீழே காணுங்கள். VCD 352×288 Pixels DVD 720×576 pixels HD (720p) 1280×720 pixels Full HD (1080p) 1920×1080 pixels 4K Ultra UD (2160p) 3840 × 2160 Pixels தற்போது நாம் பயன்படுத்தும் வீடியோ ரெசொல்யூசன் 2K எனப்படும் 1080p ஆகும். இது அதிகபட்ச குவாலிட்டி. இந்தியாவில் நிறைய பேர் இன்னும் VCD குவாலிட்டியில் தான் பார்க்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. 4K வீடியோ ரெசொல்யூசனுக்கும், நாம் பயன்படுத்தும் Full HD வீடியோ ரெசொல்யூசனுக்கும் என்ன வித்தியாசம் என்பதை கீழே உ

Moto X இந்தியாவில் அறிமுகம் [Specifications & Price]

Image
அவ்வப்போது ஸ்டைலிஷான ஸ்மார்ட்போன்களை வெளியிடும் மோட்டோரோலா நிறுவனம் கடந்த வருடம் ஜூலை மாதம் அறிவித்த போன் Moto X . கடந்த மாதம் Moto G இந்தியாவில் வெளியான நிலையில், Moto X எப்போது இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பலரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் Moto G யை வெளியிட்ட Flipkart நிறுவனம் மூலமே இன்று Moto X இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விலை ரூபாய் 23999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android v4.4 (KitKat) OS – ஐ கொண்டுள்ளது. இதில் தமிழில் படிக்க மற்றும் எழுத முடியும். 10 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Quick Capture Gesture, Clear Pixel Technology, Get the Shot: Twist Wrist Twice to Shoot போன்ற வசதிகள் உள்ளன. இதில் Full HD வீடியோ ரெகார்டிங் செய்யலாம். அதே போல முன்னாலும் ஒரு 2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம். இதிலும் Full HD வீடியோ ரெகார்டிங் செய்ய இயலும். இது 4.7 inch AMOLED HD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Mul

மூடப்பட்ட பேஸ்புக் இமெயில்

Image
பெரும்பாலான பேஸ்புக் வாடிக்கையாளர்களுக்கு, பேஸ்புக் ஒரு மின்னஞ்சல் சேவையினை வழங்கி வருகிறது என்பதே தெரியாது. அண்மைக் காலம் வரை அது இயங்கி வந்தது.  ஆனால், தற்போது அது மூடப்பட்டுவிட்டது. காரணம்? யாரும் அதனைப் பயன்படுத்தாததே அதற்குக் காரணம்.  2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பேஸ்புக் மின்னஞ்சல் சேவை குறித்து அறிவிப்பு வெளியானது. ஆனால், அப்போதிருந்த நிலையில் யாரும் அதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.  இப்போதுதான் அது மூடப்படுகிறது என்ற செய்தி நம் பேஸ்புக் தளத்தில் கிடைக்கும்போதுதான், அப்படி ஒன்று இருந்ததா எனப் பலரும் கேட்கத் தொடங்கினார்கள். இந்த மின் அஞ்சல் தளத்தில் மெசேஜ், சேட் மற்றும் மின் அஞ்சல் என அனைத்தும் இணைந்தே இருந்தன. இதிலிருந்து பேஸ்புக் பயன்படுத்தாதவர்களுக்கும் மெயில் அனுப்பும் வசதி இருந்தது.  இதனைப் பயன்படுத்துபவர்களுக்கு, அவர்களின் பதிவுசெய்யப்பட்ட பெயருடன் username@facebook.com என மின்னஞ்சல் முகவரி தரப்பட்டது.  இதன் வழி அனுப்பப்படும் மின் அஞ்சல்கள், பெறுபவரின் இன் பாக்ஸில் இப்படித்தான் காட்டப்பட்டு வந்தது.  இது அவ்வளவாகப் பயன்படுத்தப் படாததா

வேர்ட் தொகுப்பில் தெரிந்து கொள்ள வேண்டியவை

Image
வேர்ட் தொகுப்பில் பக்கங்களை அமைக்கையில் டெக்ஸ்ட், வரை படங்கள், படங்கள், கிளிப் ஆர்ட் எனப் பலவகை அமைப்பை டாகுமெண்ட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நமக்கு கோடுகள் அமைந்த கட்டங்கள் இருந்தால் இவற்றை சரியான இடத்தில் அமைத்து அழகாக டாகுமெண்ட்டை உருவாக்க வசதியாக இருக்கும். இதற்காக டெக் ஸ்ட்டின் ஒரு பகுதியாக கட்டங்கள் அமைத்தால் அவையும் அச்சில் வந்து டாகுமெண்ட்டின் அழகைக் கெடுத்துவிடும். இதற்குப் பதிலாகப் பின்னணியில் ஒரு கட்டம் அமைத்து அவை நீக்கப்படுவதற்கான வழியையும் அமைத்துத் தரலாம். இதற்கு View மெனுவில் Toolbars என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் பிரிவுகளில் Drawingஎன்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Drawing Toolbar கிடைக்கும். இதில் Draw என்பதில் கிளிக் செய்து பின் Grid என்பதைக் கிளிக் செய்திடவும். பின் உள்ள பிரிவில் ‘Display gridlines on screen’ என்பதைத் தேர்ந்தெடுத்து நெட்டுவாக்கிற்காகவும் படுக்கைவாகிற்காகவும் ஒரு அளவைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இதன் பின் OK கிளிக் செய்து வெளியேறவும். இந்த கிரிட் கட்டம் தோற்றத்தில் மட்டும் வைத்துப் பயன்படுத்தும் வகையில் நமக்குக்

கூகுளில் துல்லியமான தேடுவது எப்படி

Image
இணையத்தில், சிறப்பான வழிகளில், துல்லியமாக நம் தேடலை அமைத்துத் தகவல்களைப் பெறுவது என்பது ஒரு தனித் திறமையே. இக்காலத்தில், நமக்கு என்ன தகவல்கள் தேவை என்றாலும், கூகுள் தளத்தினையே நாம் சார்ந்திருக்கிறோம். பல நேரங்களில், நம் தேடலுக்கான முடிவுகள் நமக்கு ஏமாற்றத்தினையே தரும். ஏனென்றால், பொதுவான தேடல்களாக நாம் அமைத்திருப் போம்.   கூகுள் தேடல் தளத்தினைப் பொறுத்தவரை, நாம் சரியாக நம் தேடல் கேள்விகளை அமைத்தால், நமக்கு தகவல்களும் நாம் தேடிய வகையில் கிடைக்கும். எனவே, நமக்குத் தேவையானதைச் சரியாகப் பெற, அதில் தேடல்களையும் நாம் சரியாக அமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். முன்பு இது குறித்த கட்டுரை ஒன்று வெளியானது. தற்போது இன்னும் சில குறிப்புகளை இங்கு காணலாம். பொதுவாக, நிறுத்தல் மற்றும் பிற குறிகளுக்கு நாம் அவ்வளவாக முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால், கூகுள் அளிக்கிறது. கூகுள் புரிந்து கொள்ளும் குறியீடுகளும், அவற்றின் தன்மையும் இங்கே தரப்படுகிறது. 1. + கூகுள் + பக்கம் அல்லது இரத்த வகை (AB+) குறித்த தேடலாக கூகுள் எடுத்துக் கொள்ளும். 2. @ சமூக நிலை குறித்த டேக்  (Social t ags) ஆகப் பொருள் உண்ட

எக்ஸெல்லில் அலகுகளை மாற்ற பார்முலா தேவையா

Image
செல்களை க் குழுவாகக் கட்டமிட: எக்ஸெல் தொகுப்பில் டேட்டாக்களைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட செல்கள ஒரு குரூப்பாகக் கட்டம் கட்ட வேண்டும் என எண்ணு கிறீர்களா? அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + அழுத்துங்கள்.  அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என யோசிக்கிறீர்களா? முன்பு போலவே கட்டமிட்ட செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + _ ஆகிய கீகளை அழுத்தவும். அனைத்து பார்டர்களும் காணாமல் போச்சா! படுக்கை வரிசை இணைக்க: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், புதிய படுக்கை வரிசைகளை குறிப்பிட்ட இடத்தில் இணைக்க நமக்கு வசதிகள் தரப்பட்டுள்ளன. எந்த வரிசையின் கீழாகக் கூடுதல் வரிசை வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து, பின்னர் இன்ஸெர்ட் (Insert) மெனு சென்று, அதில் Rows தேர்ந்தெடுத்து கிளிக் செய்வோம். இதன் மூலம் ஒரே ஒரு வரிசை நமக்குக் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வரிசை வேண்டும் எனில் என்ன செய்கிறோம்? இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. மேலே கூறியபடி வரிசை ஒன்றை இணைத்த பின்னர்

விண்டோஸ் பைல்களை வகைப்படுத்துவது எப்படி

Image
கம்ப்யூட்டரில் நாம் உருவாக்கும் பைல்கள் சேரச் சேர அவற்றைத் தேடிப் பெறுவது சற்று நேரம் எடுக்கும் வேலையாக மாறிவிடுகிறது. இது சில நேரங்களில் நமக்குச் சவால் விடும் செயலாக மாறிவிடுகிறது. இந்த குறையைப் போக்கும் வகையில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்ந்து தன் புதிய பதிப்புகளில், பைல்களை வகைப்படுத்தி, பிரித்துப் பார்க்கும் வசதியைத் தந்து வருகிறது. இதன் மூலம் ஒரு டாகுமெண்ட் பைல் அல்லது போட்டோ, வீடியோ எனப் பிரித்துப் பார்த்து பைல்களைத் தேடலாம். பைல்களின் பெயர்களை வகைப்படுத்தியும், பைல்களை எளிதாக அறியலாம். சில வேளைகளில், பெரிய அளவில் பைல் எனத் தேடலாம். குறிப்பாக வீடியோ பைல்களை அதன் அளவைக் கொண்டு தேடி அறியலாம். அல்லது, அண்மைக் காலத்தில் எடிட் செய்யப்பட்ட பைல்கள் என்ற வகையிலும் பைல்களைத் தேடி அறியலாம். இந்த வகைத் தேடல்களில்தான் பைல் எக்ஸ்ப்ளோரர் (File Explorer) டூலின் வியூ மெனு (View menu) நமக்கு உதவியாய் செயல்படுகிறது. பைல் எக்ஸ்புளோரர் பைல்களின் பெயர்களை அகர வரிசையில் A to Z என அடுக்கித் தருகிறது. பைல்களின் வகைப்படி அவற்றைக் குழுவாகப் பிரிப்பது என்றால், எடுத்துக்காட்டாக, உங்க

சாம்சங் காலக்ஸி எஸ் 4 அதிரடி விலை குறைப்பு

Image
இந்தியாவில், சாம்சங் காலக்ஸி எஸ் 4 மொபைல் போனின் விலை ரூ.29,499 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்த போனின் விலை ரூ. 41,500 ஆக இருந்தது. காலக்ஸி எஸ் 5 மாடல் விரைவில் சந்தைக்கு வர இருப்பதால், இந்த விலை குறைப்பு ஏற்பட்டிருக்கலாம் சாம்சங் காலக்ஸி எஸ் 4 போன்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் திட்டம் முன்பு அறிவிக்கப்பட்டது. மாதந்தோறும் பணம் செலுத்திப் பெறும் திட்டமும் செயல்பாட்டிற்கு வந்தது. இப்போது ஏற்பட்டுள்ள விலைகுறைப்பினைப் பார்த்தால், காலக்ஸி எஸ்5, காலக்ஸி எஸ் 4 அறிமுக விலையில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். காலக்ஸி எஸ் 4 மொபைலில், 5 அங்குல திரை Super AMOLED டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.6 கிகா ஹெர்ட்ஸ் வேகத்டில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியன கிடைக்கின்றன. மேலும் எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த 13 எம்.பி. திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா உள்ளது. முன் பக்கமாக 2 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 2 ஜிபி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜிபி. இதில் உள்ள பேட்டரி 2,600 mAh திறன் கொண்டது.

சாம்சங் காலக்ஸி கிராண்ட் நியோ

Image
சாம்சங் நிறுவனம் சென்ற வாரம் தன் காலக்ஸி கிராண்ட் நியோ மொபைல் போனின் (GTI9060) விலையை இந்தியாவில் அறிவித்தது.  இந்த போன் தற்போது இணைய வர்த்தக தளங்களில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.17,901. 5 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியன இதன் சிறப்புகளாகும்.  இதில், ஆட்டோ போகஸ் திறனுடன் எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 மெகா பிக்ஸெல் கேமரா ஒன்றும். 0.3 எம்பி முன்புறக் கேமரா ஒன்றும் உள்ளது.  இதில் இரண்டு சிம்களை இயக்கலாம்.  இதில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோ மற்றும் பாப் அப் பிளே வசதியும் கிடைக்கிறது. இதன் ராம் மெமரி 1ஜிபி.  இதன் ஸ்டோரேஜ் 8 ஜிபி / 16ஜிபி. இதனை 64 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.  இதில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கிடைக்கிறது. இதில் 2100 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்படுகிறது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இது கிடைக்கிறது நண்பர்களே. நன்றி தெரிந்துகொள்ளலாம்

C and C++ மொழிகளை ஆன்லைனில் கற்க சிறந்த இணையத்தளங்கள்...

Image
பலருக்கு Computer Programming Language கற்க ஆசையாக இருக்கும். அந்த வகையில் இணையத்தில் பல பல தளங்கள் காணப்படுகிறது. ஆனால் அவற்றில் சிறந்ததைத் தேர்வு செய்வது மிகக் கடினமாகும். எனவே, இங்கே நான் பார்த்த வகையில் சிறந்த இணையத்தளங்கள் பற்றி கூறியுள்ளேன். C Language ஆனது யாருக்கு உதவுகிறதோ இல்லையோ, Computer Engineerகளுக்கு அவசியமானது. சரி, தொடர்ந்து பார்க்கலாம்.. 1.Wibit.net   இது தான் முதன் முதலாக C Language கற்க பல வசதிகளையும் உள்ளடக்கிய இணையத்தளமாகும். அதாவது, இங்கு வீடியோ டுட்டோரியல்ஸ் உள்ளது. இவற்றை நீங்கள் தரவிறக்கி கற்றுக்கொள்ளலாம், அல்லது PDF file ஆக நிறுவியும் கற்கலாம். அது உங்கள் விருப்பம். 2.Cplusplus.com   இத் தளத்தில் நீங்கள் PDF மூலம் தரவிறக்கியும் கறக்கலாம்... அல்லது அங்கு குறிப்பிடப்பட்ட பிரிக்கப்பட்ட பாடம், பாடமாகவும் கற்கலாம். மேலும், இங்கு Forum option உம் உள்ளது. அதாவது உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் வேறு பலருடனும் அது பற்றி கலந்து ஆலோசித்து அவர்களின் சிந்தனையை பரிமாறிக் கொள்ளலாம் 3. Academictutorials.com இங்கு பல விதமான

நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?

Image
ஆன்லைன் ஜாப்பில் கண்டிப்பாக சாதிக்க முடியுமா?ஐடி துறையில் எப்படி ஒரு காலத்தில் வேலைவாய்ப்புகளும் சம்பளமும் கொடிகட்டி பறந்ததோ அதேபோல்தான் ஆன்லைன் வேலைவாய்ப்பும் இருந்தது. ஆனால் தற்போதைய நிலைமையோ அதற்க்கு தலைகீழ். வேலையில்லாத்திண்டாட்டம் என்பது வருடாவருடம் அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. ஏன் இந்த நிலைமை?நமது மக்கள் தொகை வளர்ச்சியும் அதற்கேற்ற புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகாதாதும்தான் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம். வருடத்திற்கு தமிழகத்தில் மட்டும் குறைந்தபட்சம் இரண்டரை லட்சம் பேர் கல்லூரிபடிப்பை முடித்து வெளியில் வருகின்றனர். நீங்களே கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் எந்த நிறுவனத்தால் வருடத்திற்கு இரண்டரை லட்சம் பேர்களுக்கு என புதிய பணியிடங்களை உருவாக்கமுடியும்? ஆட்கள் வேலைக்கு கிடைக்காத காலகட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு கல்லூரி கல்லூரியாக சென்று ஆட்களை எடுத்தனர். ஆனால் நிலைமை அப்படியில்லை, மூவாயிரம் பேர் தேவைப்படும் கம்பெனிக்கு மூன்றுலட்சம் பேர் விண்ணப்பம் போடுகின்றோம். இதன் விளைவு, நிறுவனங்கள் அவர்களுக்குத்தேவையான அதிக திறமையுள்ள ஆட்களை மட்டும் பொருக

வாட்ஸ் அப்பில் போன் அழைப்பு செய்யலாம்

Image
தற்போது டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாறிக் கொள்வதில், அதிக எண்ணிக்கையுடைய வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் செயலி, வரும் ஜூன் முதல், இணையத் தின் துணையோடு, வாய்ஸ் காலிங் எனப்படும், போன் அழைப்பினைத் தரத் திட்டமிடுகிறது. இதனால், இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்சிலோனாவில் நடைபெற்ற பன்னாட்டளவிலான மொபைல் கருத்தரங்கில் வாட்ஸ் அப் தலைமை நிர்வாகி ஜேன் கௌம் இதனைத் தெரிவித்தார். முதலில் கூகுள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். மொபைல் சிஸ்டங்களில் இது கிடைக்கும். இதனைத் தொடர்ந்து விண்டோஸ் போன் மற்றும் பிளாக்பெரி இயக்கங்களில், இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும். இன்ஸ்டண்ட் மெசேஜ் வழங்குவதில், வாட்ஸ் அப் மற்ற செயலிகளைக் காட்டிலும் முன்னிலை வகிக்கிறது. இதே சேவையை வழங்கும் தென் கொரியாவின் ககோ டாக் (KakaoTalk) மற்றும் சைப்ரஸ் நாட்டின் வைப்பர் (Viber) ஆகிய செயலிகளைக் காட்டிலும் அதிகம் பயன்படுத்தப்படுவது வாட்ஸ் அப் செயலியே. மாதந்தோறும் ஏறத்தாழ 45 கோடி பேர் இதனைப்பயன்படுத்தி வருகின்றனர். வாய்ஸ் காலிங் வசதி தரப்படும் பட்சத்தில், பலர்

டொமைன்ஸ் ஸ்நிப்பர் பற்றி தெரியுமா உங்களுக்கு..?

Image
பரவலாக மக்களிடையே புகழ் பெற்ற இணைய தளங்கள், தங்கள் பதிவுகளை, அதற்கான அத்தாட்சி பெற்ற இணைய அமைப்புகளிடம் புதுப்பிக்காமல் போனால், அவை அந்த தளப் பெயரில் தொடர்ந்து இயங்க முடியாது. இது கவனக் குறைவால் ஏற்படும் தவறாகும்.இத்தகைய புதுப்பிக்கப்படாமல் போன தளங்களை, ஒரு தனி நபர் அல்லது அமைப்பு வாங்கி, தங்கள் பெயரில் பதிவு செய்து கொள்வார்கள்.  பின்னர், அதற்கு முன்பு வைத்திருந்த நிறுவனங்களிடம், கூடுதலாகக் கட்டணம் செலுத்தினால், அவர்களுக்கே தருவதாக வியாபாரம் பேசுவார்கள். இதற்காக, இந்த தளப் பெயருக்கு வரும் வாடிக்கையாளர்களை, வேறு ஒரு பாலியல் தளத்திற்குக் கொண்டு செல்வார்கள். இதனால், ஏற்கனவே இந்த தளத்தை வைத்திருந்த நிறுவனத்திற்கு கெட்ட பெயர் ஏற்படும். இந்த ரசாபாசத்தை தவிர்க்க, டொமைன் ஸ்நிப்பர் கேட்கும் தொகையைப் பழைய நிறுவனம் வழங்கிவிடும். நன்றி  நிலவைத்தேடி 

விண்டோஸ் 8 மாற மைக்ரோசாப்ட் கட்டாயம்

Image
விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படுவது வரும் அக்டோபார் 31 உடன் முடிந்துவிடும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. விண்டோஸ் 7 ஹோம் பேசிக், ஹோம் பிரிமியம் அல்லது அல்ட்டிமேட் ஆகிய அனைத்து வகைசிஸ்டங்களுடனும் இந்த நாளுக்குப் பின்னர், கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் கம்ப்யூட்டர்களை வடிவமைத்து வழங்கக் கூடாது. பொதுவாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றை சந்தையில் அறிமுகப்படுத்தினால், ஓராண்டு கழித்து, அதற்கு முந்தைய விண்டோஸ் சிஸ்டத்திற்கு மூடுவிழா நடத்தும். பழைய விண்டோஸ் சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தங்கள் கம்ப்யூட்டர்களைத் தயாரித்து வழங்கக் கூடாது எனக் கட்டாயப்படுத்தும். இப்போது, விண்டோஸ் 8 அறிமுகப்படுத்தப்பட்டு, ஓராண்டுக்கு மேல் காலம் ஆகிவிட்டதால், இந்த முடிவினை மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மேலும், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், தன் நிறுவன வரலாற்றில் மிகச் சிறந்த படைப்பு என்று மைக்ரோசாப்ட் கருதுகிறது. எனவே, மக்கள் அதனை ஆர்வமுடன் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில், அதில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தி, அதனை எப்படியாவது