Posts

Showing posts from January, 2013

கட்டி அணைத்தால் ரத்த அழுத்தம் குறையும்

Image
நேசிப்பவகளை கட்டி அணைப்பதின் மூலம் உங்களின் உறவு பலப்படுவது அல்லாது அதில் பல நலன்களும் உள்ளதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. முக்கியமாக சோர்வான மனநிலை, ரத்த கொதிப்பு போன்ற தருணங்களில் கட்டி தழுவினால் ரத்த அழுத்தம் குறைக்குமாம், மூளை சுறுசுறுப்படையுமாம். வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ள ஆய்வின் முடிவில், தோழமையான உறவை கட்டி தழுவும் போது, இரத்ததில் உள்ள ஆக்ஸிடாஸினின் ஹார்மோன் சுரப்பியால் ரத்த ஓட்டம் சீர் அடைகிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் யாரை கட்டி அனைக்கிறீர்கள் என்பதை முதலில் கருத்தில் கொள்ளவேண்டும். மனதிற்கு பிடித்தமான நண்பர்களை அனைக்கும் போதே மனதளவிலான மாறுதல் புலப்படும். மேலும் பிடித்தமான ஒருவரின் கையை பிடித்தாலும் இதே மனப்பாங்கை அடையாலாம். ஆனால் அது முற்றிலும் நீங்கள் தேர்வு செய்த மனதிற்கு ஒப்பான மனிதராக இருக்க வேண்டும். இந்த ஆய்வின்படி, ஆக்ஸிடாஸின் எனப்படும் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் மனதிற்கு இனியவர்களை கட்டி தழுவும்போது சுரப்பதாக கூறப்பட்டுள்ளது. இவை சமூக சூழலில், பெற்றோர்களுடன், நண்பர்களுடன், காதலர்களுடன், குழந்தைகளுடன் என பல தரப்பி

பிறரது கணினிகளில் நாம் உபயோகித்த தடயங்களை அழிக்கபிறரது கணினிகளில் நாம் உபயோகித்த தடயங்களை அழிக்க

Image
சில சமயங்களில் நாம் பிறரது கணினியிலோ அல்லது பொதுக் கணினிகளிலோ பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அது போன்ற சமயங்களில் , அந்த குறிப்பிட்ட கணினிகளில் இணையத்தில் மெயில் அனுப்புவது , அல்லது முக்கியமான ஆன்லைன் பண வரிவர்த்தனை செய்து முடித்தப் பின்னர் , நமக்கு பின்னர் அந்த கணினியை பயன்படுத்துபவர்கள் , நமது இரகசியங்களை அல்லது நமது தனிப்பட்ட விபரங்களை அறியாமல் தடுக்க இந்த தடயங்களை அழிப்பது எப்படி ? வழக்கமாக நாம் ஹிஸ்டரி க்ளின் செய்வது போன்றவற்றை செய்தாலும் கிளிப் போர்டு க்ளின் செய்வது போன்ற பல வகைகளில் நமது தடயங்களை அழிக்க CleanAfterMe என்ற இலவச மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் என்பதால் , கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. இதனை நமது பென் ட்ரைவில் எடுத்துச் செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.             இதனை தரவிறக்கி CleanAfterMe.exe என்ற கோப்பை ரன் செய்தால் போதுமானது , நீக்க வேண்டிய விபரங்களை திரையில் தேர்வு செய்து Clean Selected Items பட்டனை க்ளிக் செய்து உங்கள் தடயங்களை அந்த கணினியிலிருந்து நீக்கி விடலாம். இந்த ம

இந்தியாவில் உயரும் இணைய வர்த்தகம்

Image
 இந்த 2013 மற்றும் வரும் 2014 ஆம் ஆண்டுகளில், இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயரும் வாய்ப்புகள் உள்ளதாக, கூகுள் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ராஜன் ஆனந்தன் கூறியுள்ளார்.  சற்று கூடுதல் வசதிகள் கொண்ட மொபைல் போன்களின் இடத்தில், ஸ்மார்ட் போன்கள் இடம் பெறும். இதனால், மொபைல் சாதனங்கள் மூலம் இன்டர்நெட் பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பிக்கும். இதற்கான ஆரம்பத்தினை 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே காணலாம்.  இந்த வாய்ப்பினை கூகுள் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள திட்டமிடுகிறது. ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் போன்களை இந்திய இன்டர்நெட் சந்தைக்கு வழியாகப் பயன்படுத்தும் வகையில் அவை அறிமுகப்படுத்தப்படும்.  சென்ற 2012 ஆம் ஆண்டில், இணையத்தின் தன்மை மாறியுள்ளது. கல்வி, வாகனங்கள், இணைய வர்த்தகம் ஆகியவை பெரும் அளவில் இணையம் வழி மேற்கொள்ளப்பட்டன. பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனை 62% உயர்ந்திருந்தது.  ஆனால், மொபைல் சாதனங்களின் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்தது. இந்த மூன்றும், இணையச் செயல்பாடு, மொபைல் சாதனங்கள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள

ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?

Image
ஆன்ட்ராய்ட் (ANDROID) என்பது ஒரு மொபைல் போன்களுக்கான  இயங்குதளமாகும். அதாவது கணினிகளுக்கு இயங்குதளங்கள் (Operating system)இருப்பதைப் போன்று மொபைல்களுக்கென கூகிள் உருவாக்கிய புதிய வகையான ஒரு இயங்குதளமே ஆன்ட்ராய்ட். ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது Linux Kernel என்ற இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு புதிய மொபைல் இயங்குதளமாக பரிணமித்தது. ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஆன்ராய்ட் இயங்குதள பதிப்புகள் ஒவ்வொன்றிற்குமே இனிப்பு வகையான cupcake, Donut, Eclair, Froyo, Gingerbread, Honecomb, Ice Creame Sandwich போன்ற பெயர்களைக் கொண்டுள்ளது. ஆன்ராய்ட் இயங்குதளத்தின் சிறப்புகள்:  நாம் விரும்பியபடி மொபைலின் முகப்பு பக்கத்தை வைத்துக்கொள்ளும் வசதி - Customize Home Screen வழக்கமான தோற்றத்தில் SMS கள் இருக்காமல் புதிய தோற்றத்தில் இருக்கும். அதாவது ஒருவர் அனுப்பிய SMS திறக்கும்பொழுது, அவர் அனுப்பிய அனைத்து SMS களையும் அதே வரிசையில் தொடர்ச்சியாக பார்த்துக்கொள்ளும் வசதி. அதற்கு Threaded SM

மொபைல் வழி அவசரகால பாதுகாப்பு

Image
அண்மையில் டில்லியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து பிரிவினரும் போராடத் தொடங்கி உள்ளனர்.  இவ்வேளையில், மக்கள் எடுத்துச் செல்லும் மொபைல் போன் வழியாக இந்த பாதுகாப்பினை வழங்க முடியும் என சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் பொறியாளர் ராஜாராம் நிரூபித்துள்ளார். இவர் வடிவமைத்துள்ள சேப் ட்ராக் (safetrac) என்னும் சாப்ட்வேர் தொகுப்பினை, மொபைல் போனில் பதித்துவிட்டால், அந்த மொபைல் போனை வைத்திருப்பவரை, இன்டர்நெட் மூலம் அவர் எங்கிருக்கிறார் என்று கண்டறிந்து கொள்ளலாம்.  இந்த போனை வைத்திருப்பவருக்கு ஆபத்து நிகழ இருந்தாலோ, அல்லது அசாதரணமான சூழ்நிலை, உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ, இதில் குறியிடப்படும் எமர்ஜென்ஸி பட்டனை அழுத்தி உதவி பெறலாம். எமர்ஜென்ஸி பட்டனை அழுத்தியவுடன், அந்த மொபைல் போன் பயன்படுத்துபவர் ஏற்கனவே பதிந்து வைத்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்தியும், மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சலும் அனுப்பப்படும்.  சாப்ட்வேர் மூலம் அவர் இருக்கும் இடம் அறியவருவதால், உடனடியாக அவர் இருக

நிமிடத்திற்கு 500 போன் விற்கும் சாம்சங்

Image
மொபைல் மற்றும் மெமரி சிப்களைத் தயாரித்து வழங்குவதில், உலக அளவில் முதலிடம் பிடித்துள்ள சாம்சங் நிறுவனம், கடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் 830 கோடி டாலர் லாபமாகப் பெற்றதாக அறிவித்துள்ளது.  பன்னாட்டளவில், ஒரு நிமிடத்தில் 500 மொபைல் போன்கள் என்ற அளவில் விற்பனை மேற்கொண்டு வருகிறது. சென்ற ஆண்டில், இதன் போட்டி நிறுவனமான ஆப்பிள் ஒரே ஒரு ஸ்மார்ட் போனை மட்டுமே அறிமுகப்படுத்தியது, சாம்சங், அந்த அந்த நாடுகளின் மக்கள் விருப்பத்திற்கேற்ப, ஸ்மார்ட் போன் வரிசையில் 37 மாடல்களை அறிமுகப்படுத்தியது.  இதே ஸ்மார்ட் போன் வரிசையில், தைவான் நாட்டைச் சேர்ந்த எச்.டி.சி. 18, நோக்கியா 9 மற்றும் எல்.ஜி. 24 மாடல் போன்களை அறிமுகம் செய்தன.

IT CO2 Information

Image
இன்டர்நெட் இணைப்பு உலகின் செயல்பாடுகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பாக மாறிவிட்ட நிலையில், இதில் பயன்படுத்தப்படும் சாதனங்கள், ஆண்டுக்கு 83 டன் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவினை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தகவல் தொழில் நுட்ப துறை இயக்கம் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஜெர்மனி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. இது உலக அளவில் வெளிப்படும் இந்த வாயுவில் 2% ஆகும்.  இது வரும் 2020 ஆம் ஆண்டில் இரு மடங்காக உயரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டறிய பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.  இன்டர்நெட் மற்றும் பிறவகை நெட்வொர்க்கில் இயங்கும் அனைத்தையும் ஆய்வில் கொண்டு வர வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .