கூகுள் தர இருக்கும் சூப்பர் போன்



மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் போட்டிக்கு இழுக்கும் வேலையில் கூகுள் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கியுள்ளது. 

இதன் முதல் படியாக, சூப்பர் ஸ்மார்ட் போன் ஒன்றை வடிவமைக்கும் முயற்சிகளில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

1,250 கோடி கொடுத்து கூகுள் வாங்கிய மோட்டாரோலா நிறுவனத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த ஸ்மார்ட் போனில், தற்போது சாத்தியமாகக் கூடிய அனைத்து தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி, கூடுதல் வசதிகள் தரப்படும். தற்போதைய போன்களில் உள்ள கலர் கட்டமைப்பில் உள்ள எண்ணிக்கயைப் பெரும் அளவில் உயர்த்தப்படும். 

போனின் ஹார்ட்வேர் எளிதில் உடைந்து போகாத அளவிற்கு கடினமாக அமைக்கப்படும். வழக்கமான காட்சிகளுடன், பனாரமிக் வியூ என்று சொல்லக் கூடிய, பரந்துவிரிந்த காட்சி எடுக்கக் கூடிய கேமரா ஒன்று இணைக்கப்படும். 

இவற்றுடன் அதிக நாட்கள் தொடர்ந்து மின்சக்தி தரக்கூடிய திறனுடன் பேட்டரி வழங்கப்படும்.

இந்த போன் நிச்சயமாய் 2013 ஆம் ஆண்டில் விற்பனக்கு அறிமுகப்படுத்தப்படலாம். 

இத்துடன் எக்ஸ் டேப்ளட் என்ற பெயரில் டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றையும், இந்த இரு நிறுவனங்கள் வடிவமைக்க இருக்கின்றன.

இந்த தகவல்கள் குறித்து, மோட்டாரோலா தலைமை நிர்வாகியிடம் கேட்ட போது, குறிப்பாக இவை என்று குறிப்பிடாமல், அண்மையில், பொறியாளர் குழு ஒன்றை அதிக முதலீட்டில் அமைத்து, புழக்கத்தில் இல்லாத வகையில் தொழில் நுட்பம் பயன்படுத்தும் வழிகளைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?